மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா நேரில் பார்வையிட்டார்

கூடலூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு : நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா நேரில் பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் பெய்த தொடர் மழையால், பந்தலூர், பொன்னானி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் கரைபுரண்ட நீர் ஊருக்குள் புகுந்ததால், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டனர்.