நீலகிரி வனப்பகுதியில் திடீர் தீ விபத்து


    நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
    கூடலூரை அடுத்துள்ள நாடுகானி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல்அறிந்து வனத்துறையினர், அப்பகுதி மக்களின் உதவியோடு, காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
   வறட்சி காரணமாக, சமீபத்தில் உதகையின் பல்வேறு வனப்பகுதிகளில் வனத் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மதியம் நம்பாலாக்கோட்டை சிவன் கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதே போல் தேவாலா ஊசி மலை பகுதியிலும் வனத் தீ ஏற்பட்டுள்ளது.
                                                            -பசுமை நாயகன்